Thursday, 23 April 2020

உலக சமாதானம் பாடல் 23



https://www.facebook.com/100025456231980/posts/628076464717556/

உலக சமாதானம் பாடல் 
23 . உடலில் இயற்கை செயற்கை ரசாயன மாற்றங்கள் 

மனிதர்களின் உடலில் உள ரசாயனங்கள் 

மாறிக் கொண்டே இருக்கும் இருவிதத்தில் . 

தனியமைப்புக் கருவான நாத விந்தில் 

தரம் மாறும் , அண்ட கோடி சஞ்சாரத்தால் , 

எனில் இவையே இயற்கை ரசாயன மாற்றம் ஆம் .

இயக்குவதால் உடலை , கொள்ளும் ஆகாரத்தால் , 

இனி அந்த உடலில் எழுகிற எண்ணத்தால் , 

ஏற்படும் மாற்றம் செயற்கை எனும் மாற்றாகும் . 

மனிதர்கள் உடலில் உள்ள ரசாயன அமைப்பில் மாறுதல்கள் இயற்கை - செயற்கை என இரு விதங்கள் ஆகும்.

நாதவிந்து கூட்டமைப்பாலும் , ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பல அண்டங்கள் ஒன்றை ஒன்று ஒலி , ஒளி ஈர்ப்பு என்னும் வகையில் , கவர்ந்தும் தாக்கியும் பிரதிபலித்தும் கொள்ளும் இயக்கத்தாலும் ஒவ்வொரு உடலுக்கும் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் இயற்கை மாற்றம் ஆகும் . 

ஆகாரம் , மருந்து , முதலியன உண்பதாலும் உடற்கருவிகளை இயக்கித் தொழிலாற்றுவதாலும் பலவிதமான எண்ணங்கள் , ஆராய்ச்சிகள் நடத்துவதாலும் ஏற்படும் - விளையும் மாற்றங்கள் செயற்கை ரசாயனங்கள் எனப்படும் .


No comments: