Thursday, 10 January 2019

அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு - தத்துவ நோக்கில்....

*அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு - தத்துவ நோக்கில்...*

*இன்பம் எனக்கு ! துன்பம் உனக்கு !*

ஒருவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.

'நமக்கு கஷ்டம் வரும்போது தானே கடவுளை நினைக்கிறோம். மற்ற நேரங்களில் அதைப் பற்றி நினைக்கிறதே இல்லையே......?

இதற்கான பதில் என்னவாக இருக்கும்?

அது ஒரு வியாபாரம்' என்றார் மகரிஷி.

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

'துன்பம் வரும்போது அதை அவன்கிட்டே கொடுத்து விடலாம், இன்பம் வரும்போது அதை நாமே வைத்துக் கொள்ளலாம்.

நன்றி கூட சொல்ல வேண்டியதில்லை.'
( சிரிப்பலை)
 - அருட்தந்தை

தத்துவார்த்தமான அருட்தந்தையின் நகைச்சுவையுணர்வு ரசித்து, கற்றுக்கொள்ள வேண்டும்.

துன்பம் வரும்போது, தேங்காய் உடைக்கிறேன்.. பணம் உண்டியலில் போடுகிறேன், மொட்டை அடித்துக் கொள்கிறேன் போன்று வேண்டுவதால் எந்த பலனும் கிடைக்காது. அவரவர் கர்மவினைக்குத் தகுந்த படியே பலனை அனுபவிக்கிறோம் என உணர்ந்து கொள்ள வேண்டும்.

'விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை'

அழுத்தம் பொதிந்த வரிகள்.

'எந்த சீவனுக்கும் அறிவிற்கும் உடலுக்கும்
அந்தச் சமயத்தில் தேவையாய், பொருத்தமாய்,
வந்த அனுபோகம் இன்பமாம்; பின் விளைவைச்
சிந்திக்க, தீங்கு அற்றது எனில் அதுஉயர்வு ஆம்!'

'இன்பமே அளவுமுறை மீற மாறத்
துன்பமாய் மாறிவிடும். இயற்கை உண்மை!
இன்பமே துய்க்க வெனில், தோன்றுகின்ற
துன்பத்தை ஒழுக்கமுடன் தீர்த்தால் போதும்.'

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

*அயராத விழிப்பு நிலையில் செயல்களாற்ற துன்பமே வாரா.*

அருட்தந்தை அமுதமொழிகளை அறிவையறிந்த தெளிவில் உணர்ந்து, அதன்படி வாழ்ந்து அமைதி பெறுவோம்!!

குருவே துணை!!

அன்புடன் ரேவதி சிவகுமார்

No comments: