Tuesday, 11 December 2018

அருட்தந்தை கேள்வி பதில்

கேள்வி :-

"சுவாமிஜி அவர்களே, ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வினைப் பதிவுகள் திருமணம் செய்து கொண்டபின் உடல் இணைப்பால் ஒருவர் பதிவு மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?


மகரிஷியின் பதில் :-

"நிச்சயமாக பதிவுகளில் பரிமாற்றம் ஏற்படும். அவ்வாறு ஏற்படுவதே இருவரும் இணைந்து செயல்பட அல்லது எதிர்த்து சண்டையிட காரணமாகிறது. ஏற்கனவே ஒருவருக்கொருவர் உள்ள பதிவை மாற்றுவதற்குத்தான் இருவருமே இணைகிறார்கள். இதற்கான பதிவு ஏற்கனவே செயலுக்கு வந்த பிறகு தான் இயற்கை இருவரையும் இணைத்து வைக்கிறது. ஆனால் மேல் எழுந்த வாரியான பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ இருக்கும். அவையெல்லாம் ஒருவரை ஒருவர் பாதிப்பதில்லை. உதாரணமாக, ஒருவருக்கு ஒரு செயல் பிடிக்கும் என்றால் மற்றவருக்கும் அது பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை."


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Thursday, 20 September 2018

The change of day (10/09/2018)

''May the whole world enjoy Prosperity, happiness, long life, enough wealth and peace.''

Be Blessed.

*A change of the day * (10/09/2018)

Communion / Imposture

Stanza 279

The lute is bent, the arrow straight: judge men
Not by their looks by acts.

Description 1:
Straight up arrow The horn's horn is good when it comes to the curve. People should also recognize the character of the people.

Description 2:
Array is blurred by the shape of the shape. The neck is bent but the action is no longer the act. So let the human beings weakened by the act.

English Couplet 279:
Cruel is the arrow straight, the crooked lute is sweet, 
Judge by their deeds the many forms of men you meet.

Couplet Explanation:
As it is in their use, the curved lute is straight, so by their deeds, let's be estimated.

If you start to see a person's thoughts and thoughts, you will see only good ones. But at the same time he is good? or oTher ?? And need to be aware.

But if someone starts to think about the faults, it can be a long time for someone to get a sense of consciousness and feel. More and more will be taken.

We have been born to realize our own. Thereby, it is necessary to pursue its duties and public good, to cleanse and to achieve success.

If you focus only on viewing the job * or * will go away.

It should be full attention to what should be done.

If you are interested in pulling people's attention on his side, he will always be lucky for him.

If you let someone distract or 'distort', the attention will be dark in the path of life.

We were born to come from light to light.
Let the light shine in the minds of many, not in darkness.

We have to live in a right way by knowing the nature and characteristics of people.

If we practice to keep our mind clear, our mind will expand to universe.
Love is love.

With Jk (Jayalakshmi Kumaresan)

தினம் ஒரு மாற்றம் (10/09/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (10/09/2018)

குறள் 279: 

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 

நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

மு.வரதராசனார் உரை:

நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Translation: 
Cruel is the arrow straight, the crooked lute is sweet, 
Judge by their deeds the many forms of men you meet.

Explanation: 
As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.

ஒருவர் பிறரிடம் நிறைவான மனதையும், எண்ணங்களையும், பார்க்க ஆரம்பித்துவிட்டால், அவர்களிடம் நல்லவைகளை மட்டுமே பார்க்கத் தோன்றும். ஆனால் அதே சமயம் அவர் நல்லவரா?? மற்றவரா?? என்பதிலும் விழிப்புணர்வும் அவசியம் வேண்டும்.

ஆனால் ஒருவர்,  பிறர் குறைகளை பற்றி மட்டுமே சிந்திக்கத்  தொடங்கினால், ஒருவர் மெய்யுணர்வு பெறவும், தன்னிலை உணரவும், நீண்ட காலம் ஆகிவிடும். இன்னும் பலபிறவிகளை எடுக்க நேரிடும்.

தன்னிலை உணரத்தான் பிறவி எடுத்திருக்கிறோம். அதன் மூலம்,  தனது கடமைகளிலும், பொது நலத்தொண்டிலும் ஈடுபட்டு, தூய்மையும், மேன்மையும், அடைய முற்பட வேண்டும்.

வந்த வேலையை பார்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினால் *அல்லது* என்பது தானே சென்றுவிடும்.

எது தனக்கு வேண்டும் என்பதில் தான் முழு கவனம் இருக்க வேண்டும்.

பிறரின் கவனம் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதில் நாட்டம் இருப்பதை விடுத்து *தன்னிடம் 'தானே'* நாட்டம் கொண்டால் தனக்கு எப்பொழுதும் லாபமே.. நட்டம் இல்லை.

கவனத்தை ஒருவர்...... பிறரால் அல்லது 'தன்னைத்தானே' சிதறடிக்க அனுமதித்தால் வாழ்க்கையின் பாதையில் இருளே மிஞ்சும்.

கருவிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதற்காகவே பிறந்தோம்.
வெளிச்சத்தை பலருடைய எண்ணங்களில் படர விட வேண்டுமே தவிர இருளில் மூழ்கக் கூடாது.

மனிதர்களின் குணமறிந்து, பண்பு அறிந்து, அறவழியில்   நடப்பதே சிறப்பு.

மனதை செம்மையாக வைக்கப்பழகினால் மனம் விரிந்து அகண்டாகாரமாகும்.

அன்பு பேரன்பாகும்.

அன்புடன் ஜே.கே

Monday, 17 September 2018

அருட்தந்தை கேள்வி பதில்

கேள்வி:

"சுவாமிஜி, நமக்குத் துன்பம் செய்தவரை நாம் மனதார மன்னித்து விடுகிறோம். அப்பொழுது அவர் செய்த செயலுக்கு விளைவு தோன்றக் கூடாது அல்லவா?"
.

மகரிஷியின் பதில்:

"மற்றவரின் செயலால் துன்பம் அடைந்தவர் பெருந்தன்மையோடு மன்னித்துவிட்டாலும், துன்பம் செய்தவரின் உள்ளுணர்வாக இருக்கும் பேரறிவானது விட்டுவிடாது. அவர் செய்த செயலைப் பதிவு செய்து இருப்பு வைத்து விளைவைக் காலத்தால் அளித்துவிடும்.

தவறு செய்து கொண்டே இருப்பவன் மனிதன். அதைத் திருத்தம் செய்து கொண்டே இருப்பவன் இறைவன். அந்தத் திருத்தம் தான் விளைவாக வந்து துன்பமாகத் தெரிகிறது."
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி..


Manavalakalai yoga an intro in English


Sunday, 16 September 2018

எண்ணம் ஆராய்தல் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிந்தனை உரை

இது தெரிந்தால் வாழ்வில் வெற்றி அடையலாம்

எண்ணம் ஆராய்தல் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிந்தனை உரை

Saturday, 15 September 2018

Shri Vethathiri Maharishi Biography Part 2

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழ்க்கை வரலாறு - பகுதி 2*⬆

Shri Vethathiri Maharishi Biography Part 1

*அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழ்க்கை வரலாறு - பகுதி 1*⬆