Friday, 5 July 2024

தூக்கத்தில் உடல் எடை அதிகரிப்பது ஏன்?

தூக்கத்திலும் கொழுப்பை சேர்க்கும் கெட்ட பழக்கங்கள்… ப்ளீஸ் வேண்டாமே!

நாம் தூங்கும்போதும் கூட உடல் எடை அதிகரிக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒரு உண்மை. போதுமான தூக்கமின்மை, தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணிகள் தூக்கத்தில் கூட நமது உடலில் கொழுப்பை சேர்த்து உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். இந்தப் பதிவில் தூக்கத்தின்போது உடல் எடை அதிகரிக்கக் காரணங்களான சில கெட்ட பழக்கங்களைப் பற்றியும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றியும் பார்க்கலாம். 

கொழுப்பு சேர காரணமாகும் கெட்ட பழக்கங்கள்:

போதுமான அளவு தூக்கம் இல்லாதபோது உடலில் Leptin என்ற பசியைத் தணிக்கும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இது Ghrelin என்று பசி உணர்வை தூண்டும் ஹார்மோனின் அளவை அதிகரித்து அதிகமாக சாப்பிட தூண்டுவதால், உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 

தூங்குவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பாக சாப்பிடுவது செரிமானத்தை பாதித்து இரவில் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். எனவே, போதுமான தூக்கம் இல்லாததால் மேலே குறிப்பிட்ட ஹார்மோன் சமநிலையின்மையால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

அதேபோல தூங்குவதற்கு முன் அதிக அளவான கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. 

இரவு நேரங்களில் மது அருந்துவது தூக்கத்தை வெகுவாக பாதித்து, மதுவிலுள்ள அதிகப்படியான கலோரி உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கும். 

மன அழுத்தமானது காட்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். ஹார்மோன் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கும் என்பதால், மன அழுத்தமும் இரவு நேரங்களில் நமது உடலில் கொழுப்பு சேருவதற்கு முக்கிய காரணமாகும். 

இரவில் தூங்கும்போது மல்லாக்க படுத்து தூங்குவது செரிமானத்தை பாதித்து இரவில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.‌ இதனால் தூக்கம் பாதிக்கப்பட்டு எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 

தீர்வுகள்:

ஒவ்வொரு இரவும் 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். தூங்குவதற்கு குறைந்தது இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிடுவதை நிறுத்துங்கள். தூங்குவதற்கு முன் எளிதில் செரிக்கக்கூடிய உணவை உண்ணுங்கள். 

தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களை கற்றுக்கொண்டு பயிற்சி செய்யவும். தூங்கும்போது சரியான தோரணையை பின்பற்றவும். படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஸ்மார்ட்போன் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். 

இவற்றை நீங்கள் முறையாக கடைப்பிடித்து வந்தாலே இரவில் உங்கள் உடலில் கொழுப்பு சேர்வது முற்றிலுமாக தவிர்க்கப்படும். நீங்கள் ஒழுங்காக தூங்கினாலே உடலில் எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது என்பதால், தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. 

வாழ்க வளமுடன்
💐💐🙏🏻💐💐

Monday, 22 January 2024

வாழை இலை

வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .

வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் , 
சாப்பிடும் முன் ... 
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!

சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!

இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது . 
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ... 

எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

Wednesday, 10 January 2024

எளியமுறை உடற்பயிற்சியின் பயன்கள் - கண்பயிற்சி


எளியமுறை உடற்பயிற்சியின் பயன்கள் - கண்பயிற்சி


  • Eye sugar, Eye BP - லிருந்து தப்பிக்கலாம்.

  • கிட்டப்பார்வை, தூரப்பார்வை பிரச்சினை சரியாகிறது.

  • புரை விழுதல் ( cataract ) வராமல் தவிர்க்கப்படும்.

  • கண் சம்பந்தப்பட்டப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு.

  • ஏற்கனவே கண்ணாடி போட்டிருந்தால் power ஏறாது (அ ) கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கண்ணாடியை எடுப்பதற்கும் வாய்ப்புண்டு.

  • வெண்மென் தசைகள் இறுக்கம் தளர்ந்து காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஒட்டன் சீராகிறது.

  • பயிற்சி சரியாக தினமும் செய்து வந்தால் 50, 60 வயதில் 30-40 வயதுள்ள ஆரோக்கியம் கண்களில் இருக்கும்.




Saturday, 2 December 2023

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் கண் பயிற்சியில் வரும் உஷஸ் முத்திரையின் பயன்கள்

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள்

கண் பயிற்சியில் வரும் உஷஸ் முத்திரையின் பயன்கள்


உஷாஸ் முத்ரா என்பது கைகளை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட விரல்களால் பிடித்து, கட்டைவிரல்களை நுனியில் இணைப்பதன் மூலம் அடையப்படுகிறது.

பொருள் மற்றும் விளக்கம்


சமஸ்கிருதத்தில் " உஷாஸ் " என்பது "விடியலைக் குறிக்கிறது மற்றும் "முத்ரா" என்பது "முத்திரை அல்லது சைகை" என்பதைக் குறிக்கிறது. இந்த முத்ரா தியானத்தின் போது நடைமுறைப்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் மக்கள் புதிய தொடக்கங்கள் மற்றும் நோக்கங்களை அமைக்க முயற்சிக்கும் போது, ​​அதனால் பெயர்.

உஷஸ் முத்திரையின் பலன்கள்


1. மன விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது - உஷாஸ் முத்ரா இரண்டு கைகளையும் சமச்சீராகப் பற்றிக் கொண்டது. இது மூளையின் இடது மற்றும் வலது அரைக்கோளங்களை சமநிலைப்படுத்துகிறது அல்லது ஒத்திசைக்கிறது. இதனால், மனதில் தெளிவை ஏற்படுத்தவும், விழிப்புணர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

2. எண்டோகிரைன் அமைப்பின் நன்மைகள் - உஷாஸ் முத்ரா ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு வரம். PCOD மற்றும் தைராய்டு நோயாளிகள் இந்த எளிய கை சைகையை வைத்திருப்பதன் மூலம் பலன்களைப் பெறுகிறார்கள். இது சரியான ஹார்மோன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு நன்மைகளை வழங்குகிறது.

3. ஒழுங்கற்ற மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது - சரியான ஹார்மோன் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை பராமரிக்க இந்த சைகை நன்மை பயக்கும். எனவே, இது உங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு நிரந்தர தீர்வை வழங்குகிறது.

4. சாக்ரல் சக்ராவைத் தூண்டுகிறது - உஷஸ் முத்ரா சாக்ரல் (ஸ்வாதிஷ்டான) சக்கரத்தைத் திறக்க உதவுகிறது . இது ஒரு நபருக்கு பல்வேறு வடிவங்களில் உதவுகிறது. இது சமூக வாழ்க்கை, பாலியல், படைப்பாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துகிறது மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறது.

5. ஆற்றல் மட்டத்தை உயர்த்துகிறது - இந்த சைகை வழக்கமாக அதிகாலையில் செய்யப்படுகிறது. ஏனென்றால், இது எதிர்காலத்தை வழிநடத்தும் ஆற்றலை வழங்குகிறது. இது சோம்பலை நீக்கி, தீப்பொறி நிறைந்த ஒரு நாளையும் வாழ்க்கையையும் பெற உற்சாகத்தைத் தருகிறது.

Thursday, 26 October 2023

எளிமுறை உடற்பயிற்சியின் பயன்கள் : தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை : 3, 4, 5.6, 7

  • வெப்ப ஓட்டம் சீராகிறது.

  • பெண்கள் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளான அதிக உதிரப்போக்கு, Irregular periods, மாதவிலக்கு நேரத்தில் வரும் உடல் அயற்சி, வயிற்றுவலி, வெள்ளைப்படுதல் தீர்கிறது.

  • ஆண்களுக்கு விந்து அதிகமாக  வெளியேறுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

  • பயணத்தினால் வரும் வாந்தி, ஒவ்வாமை சரியாகிறது.

  • உண்ணும் உணவு சப்த தாதுக்களாக மாறுகிறது.

  • உடல் சூடு சமன்படுகிறது.

  • இதயம் சீரான இயக்கம் பெறுகிறது.

  • காற்று சிற்றறைகளுக்கு பிராணவாயு எடுத்துக்கொள்கிறது.

  • ஆயுட்காலம் நீள்கிறது.

  • உடல் லேசாகிறது.

  • இடகலை, பின்கலை, சுழுமுனை நாடிகள் இயக்கம் பெறுகின்றன.

  • உணர்ச்சி நிலைக் கடந்து உணர்வு நிலைக்கு செல்கிறோம்.

  • காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்கின்றன.

  • தைராய்ட் பிரச்சினை சரியாகிறது.

  • ஐந்தில் அளவுமுறை இயல்பாகிறது.

  • இருதயத்தில் மேல் உள்ள கொழுப்பு நீங்குகிறது.

  • நுரையீரலில் நீர் சேராமல் இருக்கிறது.

  • நுரையீரல் தொற்றுக்கு சிறப்பான பயிற்சி.

  • கண் கருவளையம் நீங்குகிறது.

  • கண்பயிற்சிக்கு உடல் தயாராகிறது.

  • உடல் பருமன் குறைகிறது.

Thursday, 12 October 2023

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் : தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை 1 & 2

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள்

தசைநார் மூச்சுப் பயிற்சி நிலை 1 & 2





  • பெண்களுக்கான சிறந்த பயிற்சி. fybroid கட்டிகள், PCOD, PCOS தொந்திரவுகள் தீரும். கட்டிகள் சுருங்க ஆரம்பிக்கும். குழந்தையின்மை பிரச்சினை தீரும்.

  • Bulky Uterus நார்மல் ஆகும்.

  • Irregular Period சரியாகும்.

  • உதரவிதானம், கணையம், பித்தப்பை ஊக்குவிக்கப்படுகிறது.

  • ஆயுள் கூடுகிறது.

  • சர்க்கரை குறைபாடு பிரச்சினை தீர்கிறது.

  • Insulin, glukogen சரியாக சுரக்கும்.

  • ஆண்களுக்கு ஹைட்ரோசல்/ஹெரண்யா வராமல் பாதுகாக்கிறது.

Monday, 9 October 2023

ஆதி முத்திரையின் பயன்கள்

ஆதி முத்திரை 


ஆதி முத்திரை பெயர் விளக்கம்:

பிறந்த குழந்தை தனது இருகை விரல்களையும் மடக்கி கட்டைவிரலை உள்ளே வைத்து இந்த ஆதி முத்திரையில் தூங்குகின்றது.

அதனால் தான் குழந்தையின் உடலில் உயிரோட்டம் சிறப்பாக இயங்குகின்றது. எனவே தான் இதற்கு ஆதி முத்திரை என்ற பெயர் வந்தது. குழந்தை வளர வளர நித்திரை அதிகமாகி ஆதி முத்திரையை மறந்துவிட்டது. நாம் சிறு குழந்தையின் கைவிரல்களை ஒவ்வொன்றாக எடுத்து விட்டாலும் மீண்டும் தனது விரல்களை மடக்கி ஆதி முத்திரைக்கு தானாக சென்று விடும்.


ஆதி முத்திரையின் பலன்கள்:


  1. உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும்.

  2. உயிர் சக்தி பாதுகாக்கப் படுகின்றது.

  3. உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.

  4. நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

  5. மன ஒருமைப்பாடு கிடைக்கும்.

  6. சுறுசுறுப்பாக உற்சாகமாக திகழலாம்.

  7. நல்ல எண்ணங்கள் உதயமாகும்.

  8. தீய எண்ணங்கள் விலகும்.

  9. எப்போது உடல் சோர்வடைகின்றதோ அப்போது இந்த முத்திரையை செயதால், உடன் ரத்த ஓட்டம் நன்கு இயங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

  10. படிக்கின்ற மாணவர்கள் படிக்கும் பொழுது உடல் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் மீண்டும் சோர்வு நீங்கும். உற்சாகமாக படிக்கலாம்.

  11. உடலில் விந்து சக்தியை தவறாக அதிகம் விரயம் செய்தவர்கள், அதனால் ஆண்மை குறைவு, வீர்ய தன்மை இழந்தவர்கள் மேற்குறிப்பிட்ட ஆதி முத்திரை செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.

Thursday, 5 October 2023

எளியமுறை உடற்பயிற்சி - சின் முத்திரையின் பயன்கள்

எளியமுறை உடற்பயிற்சி


தசைநார் மூச்சுப் பயிற்சி : நிலை - 1


தசைநார் மூச்சுப் பயிற்சியில் முதல் இரு நிலைகளில் வரும் முத்திரைகளின் பலன்கள் பார்ப்போம்.



சின் முத்திரை ஞான முத்திரை

கட்டை விரலின் நுனியின் மேல் ஆள்காட்டி விரலை வைப்பது சின் முத்திரை எனப்படும் . முனிவர்கள் ஞானிகள் அனைவரும் கைகளில் வைத்திருப்பது இந்த ”சின் முத்திரை” தான் . இதை ஞான முத்திரை என்றும் , தியானம் செய்யும்போது உபயோகிப்பதால் தியான முத்திரை என்றும் அறிவை தூன்டுவதால் அறிவுமுத்திரை என்றும் கூறுவர் .

கட்டை விரல் நெருப்பைக் குறிக்கும் . ஆள்காட்டி விரல் வாயுவைக் குறிக்கும் . இந்த முத்திரையில் காற்றின் சக்தி அதிகமாகவும் நெருப்பின் சக்தி குறைவாகவும் இருப்பதால் சக்தி குறைவான சிறிய அளவிலான நெருப்பு அணைந்து விடுகிறது  எனவே ஒருநிலைப்பட்ட மனம் அமைகிறது .

சின்முத்திரையின் பயன்கள் :-    

  • நினைவாற்றலை அதிகரித்து மூளையை கூர்மையாக்குகிறது . மாணவர்களுக்குச் சிறந்தது .

  • காற்றின் சக்தி அதிகரிப்பதால் உடலில் சுறுசுறுப்பு அதிகமாகிறது . சோம்பேறித்தனமாக மந்தமாக இருக்கும் நிலையில் இம்முத்திரையை வைத்துக்கொண்டால் உடல் சுறுசுறுப்படைகிறது .

  • மனம் சோர்வடையும் போது இம்முத்திரையை வைத்தால் மனம் சுறுசுறுப்படைகிறது . புத்துணர்ச்சி கிடைக்கிறது . மனம் ஒருமைப்பாடு அடைகிறது . புதுப்புது சிந்தனைகள் தோன்றுகின்றன.

  • அளவுக்கதிகமான தூக்கத்தை குறைக்க உதவுகிறது . தூக்கமின்மை போக்கவும் உதவுகிறது .

  • வேலை செய்ய உற்சாகம் பிறக்கிறது . உடல் மனம் இரண்டின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

  • மனம் சம்பந்தப்பட்ட இஸ்டீரியா மனச்சோர்வு மனம் சிதைவு அதிகமான கோபம் இவற்றை சரி செய்ய உதவுகிறது . 

  • நரம்புகளை உற்சாகப்படுத்துகிறது . நரம்பு சம்பந்தமான குறைகளைத் தீர்க்க உதவுகிறது . நரம்புத் தளர்ச்சி செரிபரல் பால்சி ( CEREBERAL PALSY ) , MULTIPLE SCLEROSIS  போன்ற நரம்பு மண்டலக் குறைபாடுகளைத் தீர்க்க உதவுகிறது 

  • பிட்யூட்டரி தைராய்டு கணையம் போன்ற நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு சுரக்க உதவுகிறது 

  • விழித்திரையில் ஏற்படும் நோய்களைச் சரி செய்ய உதவுகிறது .

  • பக்கவாதம் முகவாதம் போன்ற நோய்களுக்கும் தசை குறைபாடுகளுக்கும் சின்முத்திரை நல்லது . தசைகளுக்கு பலமளிக்கிறது .

  • இது குரல் வளத்தை அதிகப்படுத்துகிறது . குரல் பேச்சு இவை குறைவதுபோல் தோன்றினால் இம் முத்திரையை உபயோகிக்கலாம் . 

  • மெதுவான இதயத் துடிப்பை சீராக்குகிறது .

  • நுரையீரலில் ஏற்படும் அதிகமான சளியை குறைக்க உதவுகிறது.

  • மூட்டுகளை சுலபமாக அசைய வைக்கிறது . இம்முத்திரை மூட்டு வலியை குறைக்கிறது .

  • வாதம் அல்லது வாயுவை அதிகரிக்கிறது . உடலில் அதிகமான வாதம் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது .

  • நீண்ட காலம் இம் முத்திரையை செய்யும் போது நமது மனக்கண் திறக்கப்படுகிறது .அதாவது மூண்றாவது கண் எனும் நெற்றிக்கண் திறக்கிறது .

  • இம் முத்திரையை நீண்ட நாட்கள் செய்யும் போது புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள் தன்னால் விலகி விடும் .

Saturday, 23 September 2023

எளியமுறை உடற்பயிற்சியில் - வஜ்ராசனத்தின் பயன்கள்

வஜ்ராசனத்தில் அமர்ந்து பயிற்சிகள் செய்யும்போது கிடைக்கும் பலன்களைப் பார்ப்போம் 


  • இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

  • இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதி பலப்படுத்தப்படுகிறது.

  • இடுப்பு மற்றும் 8 கீழ் முதுகு தசைகள் பலப்படுத்துகிறது.

  • இதை உணவு உண்ட பிறகும் செய்யலாம்.

  • தவத்தில் ஆழ்ந்து செல்ல உதவுகிறது.

  • காந்த ஓட்டம் சீராகும்.

  • கால்களின் அடிப்பகுதியிலிருந்து இதயம் வரை இரத்த ஓட்டம் தடையில்லாமல் செல்கிறது.

  • செரிமான சுரப்பிகளின் திறன், செரிமான சக்தியின் செயல்திறனை அதிகரிக்கும்.

  • முக்கிய தமணி ஓட்டத்தை அதிகரிக்கும். இதயம் மற்றும் மூளை போன்ற உறுப்புகள் செயல்திறன் அதிகரிக்கும்.

  • உடலின் ஏழு சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் இணைக்கப்படுகின்றன.

  • வஜ்ராசனத்திற்கு பிறகு உடல் வைரத்தைப் போல் வலுவாக மாறுகிறது.

  • சமமாகவும் / ஒத்ததாகவும், ஆக்கினை / அனாகத சக்கரங்களைத் தூண்டுகிறது.

  • நிணநீர் ஓட்டத்தைத் தூண்டுகிறது.

  • நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலுக்கு இயற்கையான பாதுகாப்பு அளிக்கிறது.

  • தசைகளில் உள்ள பதட்டம் போய் தளர்வாகிறது.

  • வலியைக் குறைத்து சரிசெய்கிறது.


எளியமுறை உடற்பயிற்சி - கிட்னி மசாஜ்


எளியமுறை உடற்பயிற்சி - கிட்னி மசாஜ் பலன்கள்
  • வாயு பிரச்சினை தீரும்.

  • சீரணக் கோளாறு நீங்கும்.

  • கிட்னியில் கல், டயலிசிஸ், கிரியாட்டின் லெவல் பிரச்சினை அதிகம் இருப்பவர்களுக்கு சிறப்பான பயிற்சி இது.

  • கிட்னி மட்டுமல்ல - அதைச் சார்ந்த நரம்பு தொகுப்புகள் - முதுகெலும்பு, தண்டுவடம், இடுப்புப் பகுதி, பலம் பெறுகிறது.

  • மசாஜ் தசைகளில் பதட்டம் போய் தளர்கிறது. வலியைக் குறைக்க உதவுகிறது.



Sunday, 17 September 2023

எளியமுறை உடற்பயிற்சி - கால் பயிற்சியின் பலன்கள்

கால் பயிற்சியின் பலன்கள்
நிலை - 1

* கால் 1 ½ அடி இடைவெளி, ஈர்ப்பு விசை குறைவாகவும் / உடலுடன் உறுதியாக இணைக்கப்பட்ட அடித்தளமாக உள்ளது.

* கை, தோள்பட்டை / இடுப்பு சார்ந்த பிரச்சினை தீர்கிறது.

* கை ஊன்றி செய்யும்போது தசைகள் / தோள்கள் பலம் பெறுகின்றன.

* பாதங்களை வெளிப்புறம் ( in/out ) செய்யும்போழுது ஈர்ப்பு விசை ( Gravitational force ) தாக்காமல் அதாவது சமன்படுத்தப்படுகிறது.

* கால்களை அகலமாக விரித்து பரவ முடியும்போது கால் தசைகள் பலம் பெறுகின்றன.

* உடல் ஆற்றல் பெருகி சமன்படுகிறது.

* மனம் - உடல் இணைப்பை  மேம்படுத்துகிறது.

* கால்கள் (In-Out) உள்ளே வெளியே எனும் பயிற்சி செய்யும்போது எதிர்ப்புத்திறன் கூடுகிறது.

* இடுப்பு மூட்டு பலம் பெறுகிறது.

* கால் பாதங்கள் நீட்டிய நிலையில் சுழற்றும் போது இடுப்பு, கனுக்கால், தோள்கள், கைகள் மற்றும் மார்புப் பகுதி தசைகள் வரை வலுப்பெறுகின்றன.



Saturday, 2 September 2023

எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் / Benefits of simplified kundalini yoga phisycal exercises

                                      எளியமுறை உடற்பயிற்சி

கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 1




  • கைப்பயிற்சியின் முதல் நிலையில் கால் பலம் பெறுகிறது.

  • ½ அடி இடைவெளியில் கால்களை வைக்கும்போது முதுகெலும்பு பலப்படுகிறது

  • இது கணுக்கால், தொடைகள் மற்றும் மூட்டுகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இடுப்பு மற்றும் அடிவயிற்று தசை அசைவுகளின் கட்டுப்பாட்டைப் பெற உதவுகிறது.

  • இரு கைகளையும் தலைக்கு மேல் குவிந்து, காதோடு ஒட்டி வைக்கும்போது கழுத்து தசைகள் பலம் பெறுகின்றன.

  • தலைக்கு மேல் கைகள் குவித்து 4 மூச்சுகள் இழுத்து விடும்போது நுரையீரல் திறன் கூடுகிறது.

  • வலது மூளை, இடது மூளை இணைப்பதற்கான பயிற்சியாக உள்ளது.

  • கைகளை மேல்நோக்கி குவிக்கும்போது தலை முதல் இதயம் வரையிலும், கைகளை கீழ்நோக்கி தொடை ஒட்டி வைக்கும்போது இதயம் முதல் பாதம் வரை இரத்த ஓட்டம் சீராகிறது.

  • பஞ்சபூத ஆற்றல் சமன்படுகிறது.




கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 2



  • வாத நோய்கள் கட்டுப்படுகிறது.

  • நுரையீரல் தோற்று வராமல் தடுக்கப்படுகிறது.



கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 3,4,5


  • வாதம், பித்தம், கபம் சரியாக இயங்குகிறது.

  • பிரண சக்தி சீராகும்.

  • சிறுநீர், மலம், விந்து சரியான முறையில் வெளியேறும்.

  • சிறுநீரகம், கணயம் செயல்பாடு சமன்படும்.

  • உடல் சூடு சமன்படும்.

  • உணவு சப்த தாதுக்களாக மாற உதவுகிறது.

  • வலிப்பு கட்டுக்குள் வரும்.

  • உடலில் உள்ள இராஜ உறுப்புகள் சீரான இயக்கத்திற்கு வரும்.

  • மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது.

  • கை மரத்துப் போதல், உறைந்த தோள்பட்டை குணமாகிறது.

  • மனஅழுத்தம் குறைகிறது.







  • வலது கால் 1 அடி முன்னும் இடது கால் பின்னும் வைக்கும்போது பிரமிட் வடிவம் கிடைக்கிறது. முழுமையான சீவகாந்தத்தை ஈர்த்து தரும். உடலுக்கு ஆற்றல் கூடுகிறது.




கைப்பயிற்சியின் பலன்கள்   :  நிலை - 6



  • பாதம் ½ அடி இடைவெளி விடுவதால் அபரிமிதமான சீவகாந்தம் உள்ளிழுக்கப்படும்.

  • இரு கட்டை விரல்களை இணைக்கும்போழுது வான்காந்த ஆற்றல் இழுக்கப்படுகிறது.

  • கண் நரம்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

  • கழுத்து சார்ந்த பிரச்சினை மற்றும் முதுகெலும்பு (Disc) சார்ந்த பிரிச்சினைகள் சரியாகிறது.

  • உடலில் முதுகுப் பகுதியில் உள்ள தசைதான் பெரியது. அதுவே முதுகுத் தண்டைப் பிடித்து வைத்துள்ளது. அந்த முதுகுப் பகுதியில் உள்ள தசைகளை இயக்குகிறது.





  • உள்ளங்கை முட்டியில் அமர்த்தி கால்களை சுழற்றும்போது மூட்டுப் பகுதியில் சேர்ந்துள்ள கெட்ட நீர் வெளியேறும்.

  • மூட்டில் வீக்கம் இருந்தால் நீங்கும்.

  • மூட்டுகளுக்கு இடையே எண்ணெய்ப் பசை இருப்பை அதிகரிக்கும்.

  • மூட்டுத் தேய்மானம் வராமல் காக்கப்படுகிறது.














Saturday, 24 June 2023

சாந்தி தவ நுணுக்கங்கள்


சனி, 28 டிசம்பர், 2013

சாந்தி தவம்: சில பயனுள்ள நுணுக்கங்கள்

 

1. தண்டுவட சுத்தி செய்யும் போது மூச்சு விடும் போது மூலாதாரத்தை கவனிக்க வேண்டும்.

2. பிருத்த்வி முதிதேரியல்(mutra) மனம் வைத்து மூலாதாரத்தை கவனித்தால் சாந்தி நன்கு பிடிபடும்....

3 .வெள்ளி கிழமை கலை தீப பயிற்சி செய்த பின்பு சாந்தி செய்தால் நன்றாக உணர முடியும். தினமும் தூக்கத்திற்கும் முன்பு சாந்தி செய்து பழகினால் நல்லது.

4. ஒரு சிறு கர்சீப்பை நீரில் நனைத்து, பிழிந்து பின் மூலாதாரப் பகுதியில் உருட்டி வைத்துக் கொண்டு தவம் செய்வது தாரணைக்கு எளிதாய் அமையும். மூலாதாரத்தின் உணர்வு நன்றாய் தோன்றிய பின் கர்சீப்பை எடுத்து விடலாம்.

5. அக்கு பிரஷர் செய்யும் முதல் புள்ளி இடது கை மூன்று விரலில் வைத்துக்கொண்டு, வலது கை ஆல் காட்டி விரல் மூலாதாரத்தை தொட்டு (முதுகு தண்டின் நுனிப்பகுதியை) தொட்டுக்கொண்டு இடது பக்கம் படுத்துக்கொண்டு செய்ய வேண்டும். தூக்கம் வரும் வரை (10 - 15 நிமிடங்கள்) மனம் விரல் நுனியை கவனித்தவாறு இருந்தால் நன்கு தூக்கம் வரும். சாந்தி தவம் நன்கு உணர முடியும்.

6. ஆரம்ப பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பிட்ட பிறகும் மூன்று நிமிடம் இறங்குபடி கவனிக்க வேண்டும். இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களை பார்த்துக்கொண்டே, நினைவை மட்டும் மூலதாரத்தில் வைத்திருக்க வேண்டும்.

7. அசுவினி முத்திரையைத் தவறாது போட்டு வருபவர்களுக்கு மூலாதாரப் பகுதியில் கவனத்தை வைப்பது பழக்கமாய் மாறிவிடும். அத்தகையவர்கள் சாந்தி தவத்தில் எளிதில் கவனத்தை அப்பகுதிக்கு நகர்த்தி விடுவார்கள்.

8. புவிக்கு தன் மீது படும் எந்த ஒரு காந்தக்களதையும் தன்னுள்ளே ஈர்த்துக்கொள்ளும் பண்பு உண்டு [earthing]. நாம் சம்மணமிட்டு தவம் செய்கையிலே புவியின் மேற்பரப்புக்கு மிக அருகாமையிலே அதைத் தொடுமளவுக்கு நமது மூலாதாரம் வருவதினாலே, அங்கே தேங்கியுள்ள காந்தம், புவியின் காந்தக்களத்தோடு பின்னிப் பிணைய ஏதுவாகின்றது. இந்த நிகழ்வு கூட, மூலாதாரத்தில் உறங்கும் காந்தத்தை நாம் உணர முடியாமற் போவதற்குக் காரணமாக் அமையக்கூடியதே. இதைத் தவிர்க்கவே நாம் பாய் போன்றவற்றில் அமர்ந்து தவம் செய்கின்றோம். இக்காரணத்தாலே, சற்றே உயரமான தலையணை, மடித்த கம்பளிப் போர்வை போன்றவைகளின் மீது அமர்ந்து தவம் செய்வது மூலாதார உணர்தலை எளிதாக்கும். சேர் மீது அமர்ந்து தவம் செய்தலையும் முயற்சிக்கலாம்.

9. சாந்தித் தவம் துவங்குகையில் மூலபந்தத்தில் இருந்து வரலாம், அது கவனத்தை ஆசனவாய்ப்பகுதியில் இருத்த உதவியாய் அமையவல்லது.

10. ஒரு அன்பர் சொன்னது: குண்டலினி நமது முறையில் முதுகுத் தண்டுக்கு வல இடப்புறமுள்ள பிங்கலை, இட நாடிகளின் [உஷ்ண, குளிர் நாடிகள்] வழியாகத்தான் மேலெழும்புகின்றது. மூலாதாரத்தவத்தைச் செய்யும் போது ஒரு நனைந்த ஈரத்தண்டை முதுகுத்தண்டின் மீது முழுக்கப்படுமாறு போர்த்திக் கொண்டால், உஷ்ண, குளிர் நாடிகளின் வழியாக அத்துணை எளிதில் உயிராற்றல் மேலெழும்பாது, அப்படியே சற்றே எழும்பினாலும், நனைந்த துண்டு போர்த்தியமையால் அதை நம்மால் உணர இயலாது. இவ்வாறு மனம் குண்டலினியோடு சேர்ந்து நகரா நிலையில், மூலாதாரத்தில் தேங்கியுள்ள ஆற்றலிலே தான் மனம் நிலைக்கும். இது சாந்தி யோகத்தை நல்லபடியாகச் செய்ய வழிவகுக்கும்