https://www.facebook.com/100025456231980/posts/592895588235644/
*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 14 – மனிதனின் முன்னேற்றம்*
விருப்பு வெறுப்பு உணர்ச்சி மிக்க மனிதன், அன்று
விலங்குகளைப் போல், காட்டில் குகையில் வாழ்ந்தான்.
நெருப்பு கண்டபின், வாழ்வில் வேகம் கொண்டான்.
நேற்று இன்று நாளை என்றான். பொருள் சேமித்தான்.
துருப்பிடிக்கும் இரும்புடன் மின்சாரம் கண்டு,
துரிதமாக வாழ்வில் முன்னேற்றம் கண்டான்.
திருப்பம் வந்துளது அணுக்குண்டால் வாழ்வில்
தீர்க்க இவ்வபாயத்தை முயற்சி செய்வோம்.
விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளில் அதிக வன்மையும், வேகமும் உடைய மனிதன், விலங்குகளைப் போல், காட்டிலும் குகையிலும் வாழ்ந்திருந்த காலம் உண்டு.
நெருப்பைக் கண்டு பிடித்து, அதை உபயோகிக்கக் கற்றபின், வேகவைத்து ஆகாரம் உண்ணக் கற்றுக் கொண்டான். செயற்கையில் ஒளி ஏற்படுத்திக் கொண்டான். நேற்று இன்று நாளை எனக் கடந்த, நிகழ், எதிர், காலங்களை சுட்டும் முன்னேற்றம் அடைந்தான். பொருட்களைச் சேமித்தல், பாதுகாத்தல் என்பனவற்றையும் கற்றுக் கொண்டான்.
இரும்பையும் மின்சாரத்தையும் கண்டுபிடித்த பின், பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வாழ்வை வளமாக்கிக் கொண்டான். அறிவு மேலும் உயர்ந்து அனுசக்தியைக் கண்டுபிடித்த பின், வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் பாதையில், ஒரு திருப்பம் வந்திருக்கிறது.
அதாவது அவன் அடைந்த முன்னேற்றங்கள் யாவும் பயனற்றே போகும் அளவுக்கு அனுசக்தியைத் தவறாக மனித இன வாழ்விற்கும் பாதகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டதால், மனித இனமே அழிந்து விடக் கூடிய அபாயம் தோன்றிவிட்டது.
இத்தகைய விபரீத விளைவுகளைத் தடுத்து மனித இனத்தைக் காப்பாற்ற எல்லோரும் பேரு முயற்சி கொள்ள வேண்டும்.
*உலக சமாதானப் பாடல் – 15 தொடரும் ....*
*உலக சமாதானம்*
*முதற் பாகம்*
*பாடல் : 14 – மனிதனின் முன்னேற்றம்*
விருப்பு வெறுப்பு உணர்ச்சி மிக்க மனிதன், அன்று
விலங்குகளைப் போல், காட்டில் குகையில் வாழ்ந்தான்.
நெருப்பு கண்டபின், வாழ்வில் வேகம் கொண்டான்.
நேற்று இன்று நாளை என்றான். பொருள் சேமித்தான்.
துருப்பிடிக்கும் இரும்புடன் மின்சாரம் கண்டு,
துரிதமாக வாழ்வில் முன்னேற்றம் கண்டான்.
திருப்பம் வந்துளது அணுக்குண்டால் வாழ்வில்
தீர்க்க இவ்வபாயத்தை முயற்சி செய்வோம்.
விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளில் அதிக வன்மையும், வேகமும் உடைய மனிதன், விலங்குகளைப் போல், காட்டிலும் குகையிலும் வாழ்ந்திருந்த காலம் உண்டு.
நெருப்பைக் கண்டு பிடித்து, அதை உபயோகிக்கக் கற்றபின், வேகவைத்து ஆகாரம் உண்ணக் கற்றுக் கொண்டான். செயற்கையில் ஒளி ஏற்படுத்திக் கொண்டான். நேற்று இன்று நாளை எனக் கடந்த, நிகழ், எதிர், காலங்களை சுட்டும் முன்னேற்றம் அடைந்தான். பொருட்களைச் சேமித்தல், பாதுகாத்தல் என்பனவற்றையும் கற்றுக் கொண்டான்.
இரும்பையும் மின்சாரத்தையும் கண்டுபிடித்த பின், பல துறைகளிலும் வேகமாக முன்னேறி வாழ்வை வளமாக்கிக் கொண்டான். அறிவு மேலும் உயர்ந்து அனுசக்தியைக் கண்டுபிடித்த பின், வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்கும் பாதையில், ஒரு திருப்பம் வந்திருக்கிறது.
அதாவது அவன் அடைந்த முன்னேற்றங்கள் யாவும் பயனற்றே போகும் அளவுக்கு அனுசக்தியைத் தவறாக மனித இன வாழ்விற்கும் பாதகமாக உபயோகிக்க ஆரம்பித்து விட்டதால், மனித இனமே அழிந்து விடக் கூடிய அபாயம் தோன்றிவிட்டது.
இத்தகைய விபரீத விளைவுகளைத் தடுத்து மனித இனத்தைக் காப்பாற்ற எல்லோரும் பேரு முயற்சி கொள்ள வேண்டும்.
*உலக சமாதானப் பாடல் – 15 தொடரும் ....*
No comments:
Post a Comment