Thursday, 25 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(24/04/2019)*

நேரடியாக தன்னை, தனது தவறுகளை சரி செய்து கொள்ளும் வாய்ப்பு தான் ஒவ்வொரு மனிதப்பிறவியும்.

Face book app, Whats App, இது இரண்டில் சில வேறுபாடுகள் உண்டு.

Public post - இல் பலபேர் பார்ப்பார்கள்.  ஒரு பதிவு அனுப்பிவிட்டால் அதில் சில பிழைகளை திருத்த  வேண்டும் என்றால்...
FB - இல் நாம் அனுப்பிய பதிவில் திருத்தம் மேற்கொள்ள corrections சரி செய்து கொள்ள,  'Edit post' option இல் திருத்தியமைத்துக் கொள்ள முடியும்  நேரடியாகவும், உடனடியாகவும். அதன் பின்பு திருத்தப்பட்ட பதிவாக அதில் பதிவு மாற்றம்பெற்றுவிடும்.   ஆனால் Whats App இல் அப்படி முடியாது. அதில்  delete for everyone option பயன்படுத்தி  அந்த பதிவை அழித்து விட்டு தான் சரி செய்ய முடியும்.. நேரடியாக அதை பிழைதிருத்தியமைக்க முடியாது.

இப்படித் தான் மனிதர்கள்  உடனடியாகவும், நேரடியாகவும்,  FB Edit option  போல் தன்னை நேரடியாக, தன்னை தனது தவறுகளை  சரிபடுத்திக் கொள்கிறார்கள் யோக மார்க்கத்தின் மூலமாக. முழுமைப்பேற்றை பெறுவதற்கு ஒரே பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

சாதாரண மனிதர்கள் பல பிறவிகளைத் தொடர்ந்து, Delete for everyone option போன்று உயிர் அழித்து அழித்து ,  பல பிறவிகள்  எடுத்து இறுதியாக  யோக மார்க்கத்திற்கு வருகிறார்கள். முழுமையை  எய்துகிறார்கள்.

பல பிறவிகள் இப்படித் தான் நேர்கிறது . தான் வந்த நோக்கம் உணர்ந்தால்... தன்னை... தனக்குள் இருக்கும் இறைநிலையை உணர... யோக வழிக்கு குரு தானாகவே வருவார். அதற்கான தூய்மை மனதில் கொண்டால் போதும். தன்னை மாற்றிக் கொள்ளவும் தன்னை ஏற்றுக் கொள்ளவும் மனம் வந்தால் போதும்.

அன்புடன் ஜே.கே

No comments: