Wednesday, 15 August 2018

தினம் ஒரு மாற்றம் (13/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (13/08/2018)

"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ மனதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே மனதை உயர்த்திட மட்டிலா இன்பமே மனதிலே உளஎலாம் மற்றெங்கே தேடுவீர்."

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
(ம.வ.க பாகம் 2, பக்.88)

உண்ணும் உணவுக்குத் தக்க உடல் உழைத்து வாழும் போது மட்டுமே நல்ல உறக்கம் வரும்.

மனதை கற்பனை குதிரையில் மனத்திற்குப் பொருந்தாத எண்ணங்களை ஓட விட்டால் உறக்கம் வராது.

மனதில் எண்ணங்களை குறைத்துக் கொண்டே வந்தால் இறைவனின் குரலை கேட்கலாம்.

அந்த அனுபவத்தை மௌனத்தில் மட்டுமே உணர முடியும்.

மௌனம் அமைதி நிலையாக இருக்கும் போது கவனம் சீர்படும்.

மனஅலைச்சுழல் குறைத்துக் கொண்டே வந்தால் மனம் அலைநிலையிலிருந்து நிலையாகி விடும்.

மனம் முரண்படாமல் நிலைக்க வைக்கத் தான் தக்க பயிற்சி தேவை. அளவுமுறை தேவை. விழிப்புணர்வு தேவை.

ஒவ்வொரு முறையும் கடவுள் வழிகாட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அது தான் அறிவுறுத்தல். அதன்படி செயல்பட்டால் மனம் ஒருவருக்கு வசமாகும்.

மனத்தின் மொழி தான் மௌனம். அது ஒருவர் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தால் ஒருவரது சீவகாந்தம் செலவாவது மட்டும் இல்லாமல் புலன்களை இயக்குவதிலேயே மனமும் இயங்கும். புலன்கள் அங்கு ஓங்கும். அறிவுக்கு அங்கே இடம் கொடுக்காது.

புலன்களை ஒருமுகப்படுத்தவும், இறையுணர்வு பெறவும் தான் தவம்.

தொடர் பயிற்சி மனதை மௌனமாக்கும். புலன் இயக்கம் ஒழுங்குக்கு வரும். கட்டுக்குள் அடங்கும். அருட்பேராற்றலின் அன்புக்குரல் இனிமையாக நம்மை வழிநடத்தும்.

அன்புடன் ஜெ.கே

No comments: