Saturday, 18 August 2018

தினம் ஒரு மாற்றம் (18/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (18/08/2018)
குறள் 333:

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

விளக்கம் 1:

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

விளக்கம் 2:

நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

English Couplet 333:

Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.

Couplet Explanation:

Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.

பிரபஞ்சம் மற்றும் மனிதனின் மனம் இரண்டுமே அறிவு தான். அது பேரறிவு , இது சிற்றறிவு. அனைத்துமே அனைத்திலுமே காந்த அலைகள் வந்து கொண்டே இருக்கும்.

எந்த எண்ணத்திற்கு மனிதர்கள் அதிக அழுத்தம் கொடுக்கிறார்களோ அதற்குத் தான் முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள் மனிதர்கள். அது செயலாகிறது.

மனிதர்கள் தங்களுடைய. தேவையற்ற பயத்தை, நினைப்பை மாற்றிக் கொண்டால் போதும்.

மனசாட்சிக்கு விரோதமாக செய்யும் செயலுக்குத் தக்க விளைவு உண்டு. ஏனென்றால் அப்பொழுதே உடலுக்குள்ளே மனதிற்குள்ளே அதற்குண்டான ரசாயனமாற்றம் ஏற்பட்டு இருப்புக் கட்டிவிடும். தக்க நேரம் வரும் போது செயலாகிவிடும். உடனேவும் வரலாம். அல்லது எந் நேரத்திற்கு வருமோ அந்த நேரத்திற்கு அது தலை தூக்கும்.

தொலைக்காட்சியிலும் சோதிடத்திலும் கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். நடந்து கொண்டிருப்பதும் உண்மையாகவே இருந்தாலும் அதை பார்த்து மக்கள் என்ன எண்ணுகிறார்கள்??
அவர்கள் அந்த எண்ணத்திற்கு திணிவை, அழுத்தத்தைக் கூட்டுகிறார்கள். அதையே மீண்டும் மீண்டும் சிந்திக்கும் போது அந்த அழிவிற்கு அழுத்தம் கூட்டுகிறார்கள் மக்கள். அது செயலாகிக் கொண்டே இருக்கிறது.

இயற்கை செயலுக்கான விளைவைத் தருகின்றது. துல்லியமாக. ஆனால் விதியை மதியால் வெல்லலாம்.

ஒவ்வொரு மனிதரும் இயற்கையை மதித்து பிறர் நலன் கருதியும் பிறரை மதித்தும்  வாழும் போது மட்டுமே இயற்கை சாதகமாகும்.

உண்மையில் ஒருவர் நினைக்கும் எண்ணம் தான் அங்கே செயலாகிறது.

அந்த காலத்தில் நல்லதையே எண்ணுங்கள் என்று கூறியதும் அதற்காகத்தான்.

ஆனால் பணம் என்ற மாய வலைக்குள் தன்னை பின்னிக் கொண்டு அது இழுத்த இழுப்புக் கெல்லாம் தன்னையே தூண்டிவிட்டுக் கொண்டு தவறுகளை செய்து அதற்கான விளைவுகளையும் தானே அனுபவிக்கிறார் ஒருவர்.

மக்கள் நலன், பாதுகாப்பு, ஒற்றுமை , ஒழுக்கம் சார்ந்த நற்பண்புகள் இவை ஓங்க வேண்டும்.

அளவுக்கு மிஞ்சிய எதுவும் உடலிலும் தங்காது, வெளியிலும் தங்காது. அடித்துத் தள்ளப் பட்டு விடும். உடல்கழிவுகளாகவும், மனக்கழிவுக்களாகவும், இயற்கை பேரழிவாகவும்... சுயமாக சிந்திக்க....

இதுவே இயற்கை நியதி.

அளவோடு அனைத்திலும் இருந்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்.

வாழும் காலத்தில் கிடைக்கும் வருமானத்தில் எத்தனை பேர் பிறர் நலனுக்காக செலவு செய்கின்றனர்?

சுயமாய் சிந்தித்தேத் தெளிவாய் என்று அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி ஒருவர் தன்னையே ஆய்ந்து தெளிக.

அன்புடன் ஜெ.கே

No comments: