Friday, 17 August 2018

தினம் ஒரு மாற்றம். (17/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

தினம் ஒரு மாற்றம் (17/08/2018)

குறள் 1021:.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் 
பெருமையின் பீடுடையது இல்.

Tamil meaning
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது. 

English meaning
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).

பெண்களை மதித்துப் போற்றும் உலகில் அனைத்து வளங்களும் நிலைக்கும்.

எதையுமே மதித்து தனது கடமையுடன் வாழக் கற்றால் வாழ்க்கை சிறக்கும்.

மனதை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் மனம் திசை திரும்புவதை தவிர்க்கலாம். ஆனால் சராசரி மனிதனுக்கு இது சாத்தியமா என்பது ஒருவரின் வைராக்கியத்தை பொறுத்தது.

சில அவசியமற்ற பேச்சுக்கள், செயல்கள், சங்கடங்கள், மனதில் நிராகரிக்கக் கற்க வேண்டும்.  அல்லது மனதில் இடம் கொடுக்கக் கூடாது அல்லது மனதில் அளவுமுறை வேண்டும்.

நல்லதை பார்க்கவும், பேசவும், கேட்கவும் மட்டுமே புலன்களை பழக்கினால் மனம் அதற்கு மட்டுமே கட்டுப்பட்டு இயங்கும்.

அனைத்திற்குமே பயிற்சி தான் தேவை. அந்தப் பயிற்சிகள் தான் மனவளக்கலை பயிற்சிகளில் கற்றுத்தரப் படுகின்றன.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக மக்கள் நலனுக்காக பல அரிய விஷயங்களை எளிமையாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைபடுத்திக் கூறியிருக்கிறார்கள்.

உலகில் இயற்கையை ஒட்டியே மனிதன் வாழும் போது இயற்கை மனிதனுக்கு ஒத்தும் உதவியுமாக இருக்கிறது, அனைத்து வகையிலும்.

எப்பொழுதெல்லாம் அதை ஒருவர் மீறுகிறாரோ அப்பொழுது தான் செயல்விளைவை அனுபவிக்க நேர்கிறது.

இயற்கை சட்டம் மதித்து வாழ அனைவருமே இன்புற்று வாழலாம்.

அன்புடன் ஜெ.கே

No comments: