வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (20/08/2018)
குறள் 512:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
விளக்கம் 1:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
விளக்கம் 2:
பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.
English Couplet 512:
Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand.
Couplet Explanation:
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).
எப்பொழுதும் விளைவை பற்றி யாருமே யோசிக்காமல் பேசுவது, செயல்புரிவது என்பதில் தான் நாட்டம் அதிகம் உள்ளது பெரும்பாலானவர்களுக்கு.
விளைவு இன்பம் தருவதாக இருந்தால் அதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
விளைவு துன்பம், கவலையாக இருந்தால் உடனே சோகம், கோபம், பொறாமை என்று பல் வேறு விளைவுகள்.... ஒவ்வொருவருக்குள்ளே பலவித உணர்ச்சிகள் மனதில் உலாவரும்.
எது நலம் தரும் விளைவு??
ஒருவருக்கு ஒரு எண்ணம் உதிக்கும் போதே அது தனக்கும் பிறர்க்கும் நன்மை தரக் கூடியதா?? தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை தருமா?? சமுதாயத்திற்கும் இதனால் நலம் விளையுமா??
என்றெல்லாம் தனக்குள்ளே கேள்வி கேட்டு அதற்கெல்லாம் பதில் ஆம் , செய்யலாம் , ஒத்து வரும், என்று பதில் மனதிற்குள் வந்தால் அதை முழு மனதுடன் நிறைவேற்றலாம்.
ஒரு விஷயத்துக்கு இவ்வளவு எல்லாம் யார் யோசித்து செய்வார்கள்? அப்படியே துன்பம் வந்தாலும் நான் தானே அனுபவிக்கப் போகிறேன் என்று ஒருவரின் பதில் இருக்குமானால் அவர்கள் சுயமாக சிந்தித்தேத் தெளிக.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நலமில்லை இருந்தது என்றால் அவர் பார்க்கும் வேலையை யார் செய்வது??
ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது சதா சர்வ காலமும் அவர்கள் உடல் இயல்பு நிலைக்கு வரும் வரை கவலை இருப்பது நியாயம் தானே...
அப்படி இருக்கும் போது வீட்டில் ஒருவரின் நோய் அல்லது துன்பம் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் துன்பம் என்பது யாருக்கும் புரிவதில்லை. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.. இப்படி பல வினைகள் உண்டு.
என் கஷ்டம் என்னோட ..உனக்கு இதில் என்ன ஆயிற்று? ?என்றுகேள்வி கேட்பவர்கள் சற்றே சிந்தித்தால் விடை விளங்கும்.
செயல்புரிவதை மட்டுமே சிந்திக்காமல் அதன் விளைவு பற்றியும் யோசித்து செயல்பட்டால் அனைவருக்கு ம் நலம் உண்டாகும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment