வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (08/06/2018)
எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி, எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கச் செய்தால் எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும் எண்ணம் எழும்போதே 'இது ஏன்?'என்று எண்ணத்தால் ஆராய்ந்தால், சுலபமாக எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும், எழும் எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.(ஞானப் பேழை. பாடல் 41)
அருட்தந்தை அவர்கள் எண்ணத்தின் மகிமை பற்றி எண்ணம் ஆராய்தல் பயிற்சியில் கூறியுள்ளார்கள்.
எண்ணத்தையே எண்ணத்திற்கு காவல் வைக்க வேண்டும் என்றும் எண்ணத்தின் உயர்வை ஒட்டியே எண்ணத்தின் தரமும் பண்பும் மதிப்பும் கூடுகிறது என்றும் விளக்கியுள்ளார்கள்.
எண்ணம் எழும் போதே காரணம் கண்டுகொள்ள வேண்டும். விழிப்புநிலை வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும், ஒன்றை அவமதித்தோ, அலட்சியப்படுத்தியும் விட்டால் அதற்குண்டான விளைவையும் அவரவரே எதிர்கொள்ள நேரிடும்.
இதுவே இறைநீதியுமாகும்.
அனைத்தையும் மதித்து வாழ நினைக்கும் போது மட்டுமே அனைத்தும் நம்முடன் நல்லிணக்கத்துடன் இருக்கும்.
மனிதனில் மட்டும் அல்ல, எல்லா உயிர்ப்பொருளுக்கும் சடப் பொருளுக்கும் பொருந்தும்.
எது ஒன்றிலும் அன்புடன் நடத்தும் போது அதுவும் அவரவருக்கு அன்புடன் இணக்கத்துடன் செயல்களாற்றும். இதுவே அலையியக்கத் தத்துவமாகும். உண்மையும் கூட.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment