Saturday, 16 June 2018

தினம் ஒரு மாற்றம் (16/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (16/06/2018)

'வினைப்பதிவில் தீயவற்றை வேரறுத்து வாழ்வில் விலங்கினத்தின் செயலொழித்து விழிப்போ டறநெறியில் அனைத்துலக மக்களும்மெய் யறிவுடனே வாழும் அந்தபெரும் நன்னாளை வாழ்த்திவர வேற்போம்.
- பிரம்ம ஞானம் (பக் 120)
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

*ஒவ்வொருவரும் பிறரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும்??*

*'வாழ்க வளமுடன்' என்று ஏன் வாழ்த்த வேண்டும்?*

சமுதாயத்தில் நடக்கும் சில தவறுகளை சரி செய்வதற்காகவும், பிறர் பூரண நலத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்தால்.., தானும் நலமாக இருப்பார்... தன்னை சுற்றியுள்ளவர்களையும் நலமாக வைக்க முனைவார்.

(உ-ம்) ஒருவர்.... தெரிந்த ஒருவருக்குக் கடன் கொடுக்கிறார் ...கடன் வாங்கிய நபர் குறித்த காலத்தில் பணத்தைத் திருப்பித் தர இயலவில்லை என்றால்... பணம் வாங்கிய நபரை நினைத்து அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்களா?? அல்லது அவரை குறை கூறுவீர்களா???

அவர் நன்றாக இருந்தால் தானே கடனை திருப்பித் தர முனைவார். அதை விட்டுவிட்டு குறை கூறுவதாலோ, அவர் மீது வருத்தத்தை திணித்தாலோ, அந்தப் பணம் திரும்பி வருமா?? சற்றே சுயமாக சிந்திக்க...

நடக்கும் ஒவ்வொரு சமுதாய நிகழ்வுக்கும் யாரையும் குறை கூறுவது முற்றிலும் ஒரு தவறான கருத்தாகும்.

சில சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், சில நேரம் சாதகமாகவும், சில நேரம் பாதகமாகவும், இருப்பதற்கு அவரவரே காரணம்... என்று உணர்தல் தன்னைத் தான் மாற்றி அமைக்க முனைதல் நலம் விளைவிக்கும்.

ஒரு பொருளை பிறர் அனுமதி இல்லாமல் எடுத்தால் அதற்குப் பெயர் திருட்டு..அது தன்னுடைய வீட்டிலேயே, பெற்றோரிடமோ, உடன் பிறப்புகளிடமோ, அல்லது வேறு யாராக இருந்தாலும் அனுமதி இல்லாமல்  எடுத்தால் அது தவறு தான்.

சிறு வயதில் தெருக்களில் பள்ளிக் கூடம் செல்லும் வழியில் மாங்காய், கொய்யா என்று கல்லை விட்டு எறிந்து பறித்து உண்பது, இவை போன்ற செயல்கள் சிறுவயதிலேயே பிறரிடத்தில் அனுமதி பெற்று ஒன்றை வாங்கிப் பழக வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லி வளர்க்க வேண்டும்.

இது திருட்டு என்பது வளரும் போது அவர்களை அறியாமலேயே பெரியவர்களாகும் போதும் தவறு என்று நினைப்பதில்லை.

அது நாளடைவில் சின்ன தவறுகள், பெரிய தவறுகளாக ரகசியமாக தவறுகள் செய்ய தூண்டுகோலாக அமைகின்றன.

இவ்வாறான நிகழ்வுகளை தவிர்க்கவே அனைவரும் மன நலத்தோடும், உடல்நலத்தோடும், பொருளாதார மேம்பாட்டோடும், மனநிறைவோடும், வாழ வேண்டும் என்று எண்ணி வாழ்த்தும் போது.... அந்தத் தவறுகள் குறைக்கப்பட்டு நல்வழியில் செயல்களாற்றுவர்கள்.

தற்காலத்தில் வன்முறைகளை குறைக்கவும், நற்சிந்தனை நல் ஒழுக்கங்களும் ஓங்கவும் பிறர் நலமாக வாழ வேண்டும் என்று *'வாழ்க வளமுடன்'* என்று வாழ்த்து அனைவரது மனதிலும் ஊடுருவி செயலாகும். சமுதாய மாற்றம் இவ்வாறு உருவாகும்.

அன்புடன் ஜெ.கே

No comments: